கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது - 500 கிலோ அரிசி பறிமுதல்!

பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று காலை கோவை சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற மதுக்கரையை சேர்ந்த சிவமுருகேசன் என்பவரை கைது செய்தனர்.



கோவை: கோவையில் இருந்து மினி ஆட்டோ மூலம் ரேசன் அரிசி கடத்த முயன்ற நபரை சுந்தராபுரம் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மாநில எல்லை சோதனை சாவடிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று காலை கோவை சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலையில் ரோந்து மேற்கொண்டனர். 

அப்போது அங்கு வந்த மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி தலா 50 கிலோ வீதம், 10 மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் மதுக்கரை அட்லாண்டிக் நகரை சேர்ந்த ராம்பால் மகன் சிவமுருகேசன் (50) என்பதும், இவர் காந்திபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கேரளாவிற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...