சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகளை உருவாக்க புரூக்ஃபீல்டு பெண்கள் வொண்டர் மன்றம் பயிற்சி


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புரூக்ஃபீல்டு வனிக வளாகம் சார்பில் புரூக்ஃபீல்டு பெண்கள் வொண்டர் மன்றம் என்னும் அமைப்பு சுற்றுச் சூழலுக் தீங்கு ஏற்படுத்தாத பழைய துணிகளைக் கொண்டு பைகள் தயாரிக்கும் பயிற்சியினை வழங்கி வருகிறது.

இதில், சமூக பொறுப்புள்ள பெண்கள் ஏராளமானோர் பங்கேற்று துணிகளின் மூலம் பைகள் செய்து பிளாஸ்டிக் பையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.



இந்த பயிற்சிப் பட்டறையியில் மேல்தளம் தோட்ட சித்ரா கிருஷ்ணசாமி பங்கேற்று, துணிகளால் ஆன பைகள் குறித்து அறிமுகம் செய்து பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், மக்காத பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து எழிதில் மக்கும் தன்மையுடைய துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என கூறினார்.



இப்பயிற்சிப் பட்டறையின் இடையே கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் துணிகாள் பைகள் செய்யும் பயிற்சி வகுப்பிற்கு வந்து, பயிற்சி மேற்கொண்டிருந்தோரிடம் துணி பைகள் குறித்தும், இதனை தயாரிக்கும் கலைகள் குறித்தும் எடுத்துக்கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து, இதுபோன்ற முயற்சிகள் மூலம் கோவை மாநகரத்தில் பிளாஸ்டிக் பைகளின் பையன்பாட்டை படிப்படியாக குறைக்க முடியும் என்றும், மக்கள் தங்களது தேவைகளுக்கு பிளாஸ்ட்டிக் பைகளைத் தவிர்த்து துணிப் பைகளையே பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் க.விஜயகார்த்திகேயன் வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற இதன் இரண்டாம் நாள் அமர்வில் மை சாப்பிங் மை பேக் அமைப்பினர் பங்கேற்று துணிகளால் ஆன பைகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் என பயிற்சி அளித்தனர். 

இந்நிகழ்வில் பிளாஸ்டிக் பையினால் வரும் தீமைகள் குறித்தும், பொருட்கள் வாங்கச் செல்லும் போது தாங்களே தயாரித்த துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, பழைய துணிகள், காட்டன் புடவை, போர்வை உள்ளிட்ட துணிகளைக் கொண்டு எவ்வாறு பைகள் தயாரிக்க வேண்டும் என்று செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.



இதில், கத்தரிக்கோள், ஊசி மற்றும் பழைய துணியினைக் கொண்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வடிவமைப்பிலான பைகளை செய்வது குறித்தும், ஊசி பயன்படுத்தாமலும், கையினால் முடிச்சு போட்டே பைகளை தயாரிப்பது குறித்தும்  பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும், இது விழிப்புணர்வு நிகழ்வு மட்டுமே அல்லாமல் இந்நிகழ்வின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை எவ்வாறு தவிர்ப்பது உள்ளிட்ட கருத்துகளும் பங்கேற்பாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இதில் பங்கேற்ற பெண்கள் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான பைகளை தயாரித்து நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பெரும் பகுதி மக்களிடையே கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவை குறித்தும் உரையாடப்பட்டது. இந்த முயற்சியின் மூலமாக "பிளாஸ்டிக் பைகள் இனி வேண்டாம், மாசு ஏற்படுத்தாத துணி பைகளே வேண்டும்" என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த முயற்சி சமூகத்தில், சுற்றுச்சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என இதன் ஒருங்கிண்ப்பாளர் தெரிவத்தார்.

இன்று நடைபெற்ற பயிற்சிப் பட்டறையினைத் தொடர்ந்து பெண்கள் வொண்டர் அமைப்பினர் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்தான நிகழ்ச்சியினை மார்ச் 7ம் தேதியன்று நடத்தவுள்ளதாகவும், இதில் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பங்கேற்பார் என்றும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...