தொழில்துறையின் மானிய கடன் வழங்கக்கோரி நரிக்குறவர் சமூகத்தினர் மனு!

பல்லடம் ஆறுமுத்தாம்பாளையம் அடுத்த அறிவொளி நகர் பகுதியில் நரிக்குறவர் சமுதாய பெண்கள் தங்களது தொழிலான ஊசி, பாசி மாலை, மணி தயாரிக்கும் தொழிலை மேம்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் தொழில் துறையின் கீழ் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: தொழில்துறையின் மானிய கடன் வழங்க வலியுறுத்தி ஊசி, பாசி மாலை, மணி தயாரிக்கும் நரிக்குறவர் சமூகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



பல்லடம் தாலுகா ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குறவர் காலனியில் 90க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஊசி, பாசி மாலை, மணி ஆகியவை தயார் செய்து வெவ்வேறு பகுதிகளுக்கு நடந்தும், வாகனங்களிலும் சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் தங்கள் தொழிலை வளர்ச்சி அடைய செய்யும் வகையில் மத்திய அரசும், தமிழக அரசும் தொழில் துறையின் கீழ் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...