கோவை சுந்தராபுரத்தில் 10 வயதுடைய சந்தனமரம் வெட்டி கடத்தல்!

சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவர் தனது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வந்த சந்தன மரத்தை இரவோடு இரவாக மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சுந்தராபுரம் பகுதியில் வீட்டு வளாகத்தில் இருந்த 10 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்த சுப்பிரமணிய சர்மா என்பவரது மகன் அனந்த பத்மநாதன் (45). இவர் ஐடி நிறுவனங்களுக்கு வன்பொருள் சப்ளை செய்யும் பணியை செய்து வருகிறார். இவரது வீட்டின் வளாகத்தில் தானாக வளர்த்த சுமார் 10 ஆண்டுகளான சந்தன மரத்தை பராமரித்து வந்தார்.



நேற்று இரவு 12 மணி வரை சந்தனமரம் இருந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு வழக்கம் போல எழுந்து பார்த்த போது, சந்தனமரம் வெட்டப்பட்டு அதன் நடுபகுதியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.



இதையடுத்து அனந்த பத்மநாதன் சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் சந்தனமரத்தை வெட்டி கடத்திச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...