கோவை மாநகர ஆயுதப்படை போலீசாருக்கு வாரந்தோறும் யோகா பயிற்சி!

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆயுதப்படை காவலர்களுக்கு பிஆர்எஸ் மைதானத்தில் நடக்கும் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சிகளுடன் இனி வாரந்தோறும் யோகாசன பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்லது.



கோவை: கோவை மாநகர காவலர்களுக்கு இனி வாரந்தோறும் யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சிகள் பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. 



அதில் அவர்களுக்கு உடற்பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகிறது.



இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. 



பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். 



இதில் மூச்சுப்பயிற்சி உட்பட பல்வேறு யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டது. 



இதனை ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் வழங்கினார். 



இனிவரும் காலங்களிலும் வாரந்தோறும் ஆயுதப்படை காவலர்களுக்கு யோகாசன பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...