கோவையில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை - வடமாநில தொழிலாளர்கள் பங்கேற்பு!

கோவை பூ மார்க்கெட் பகுதியில் திப்பு சுல்தான் தக்னி ஜமாத் பள்ளிவாசலில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகை நிகழ்வில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களுடன் வடமாநில தொழிலாளர்களும் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் அங்கு விற்பனை செய்யப்பட்ட தொப்பி, அத்தர் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.



கோவை: கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகையில், வட மாநில தொழிலாளர்களும் பங்கேற்று பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர். 



இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை இன்று பெரும்பான்மை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. 



பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.



சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட அவர்கள் புத்தாடை அணிந்து தொழுகை மேற்கொண்டனர். 



பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். 



அதன்படி பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் தக்னி ஜமாத் பள்ளிவாசலில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வடமாநில தொழிலாளர்களும் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். 



மேலும் இப்பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தொழுகை செய்பவர்களுக்கான தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. இதனை வடமாநில தொழிலாளர்கள் வாங்கிச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...