கோவையில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவக்கம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 17,160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று துவங்கியது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவங்கியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 17,160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இப்பணிகளை ஆய்வு செய்ய, டெல்லியில் இருந்து ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவும் வந்துள்ளது. இந்த பணிகளில் ஏதேனும் இயந்திர கோளாறுகள் இருந்தால் அவை சரிசெய்யப்படும்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், தெற்கு வட்டாட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஒரு பிரதிநிதி உடன் இருந்தார்.

இப்பணிகள் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. கூடுதலாக பாதுகாப்பு பணிக்காக காவலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...