தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு - பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது!

தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து சென்று அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம். இவர் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் வழக்கம் போல மண்வெட்டியை எடுக்க வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார்.



அப்போது அங்கே சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த கோவை சரக வனத்துறையினர் கொட்டகையில் இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட மலைப்பாம்பை பரிசோதனை செய்து பின்னர் மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது கெம்பனூர் பகுதி வனப்பகுதிக்கு அருகே உள்ளதால் அங்கிருந்து, இந்த மலைப்பாம்பு வந்திருக்க கூடும் என தெரிவித்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...