கோவை பி.கே.புதூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு!

குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் செயினை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்


கோவை: குனியமுத்தூர் அருகேயுள்ள பி.கே.புதூர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த பி.கே புதூர் ஸ்ரீநகர் காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன், இவரது மனைவி பிரேமா கடந்த ஜூலை 4ஆம் தேதி தனது வீட்டின் அருகேயுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது குளத்துப்பாளையம் சாலை பாலு கார்டன் அருகே வந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென பிரேமா கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறிக்க முயன்றார்.

அப்போது பிரேமா செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் அரை சவரன் எடை கொண்ட செயினில் ஒரு பகுதியை பிடுங்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து பிரேமா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...