கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து : வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுக சார்பில் திடீர் சாலை மறியல்!

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அண்ணா நகரில் தொடர் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுக சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வது வழக்கம். இப்பகுதியில் தொடர் விபத்துக்கள் நடப்பதாக அப்பகுதியினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அண்ணா நகர் பகுதியில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தந்தை மற்றும் மகள் இருவரும் காயமடைந்தனர்.



இதனைத்தொடர்ந்து அடிக்கடி அப்பகுதியில் விபத்துக்கள் நடப்பதாகவும் அதனை தடுக்க வேகத்தடை அமைத்து தர கோரி பல்லடம் தமுமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...