கனிமவள கொள்ளையை தடுக்க கோரி PEOPLE OF COIMBATORE அமைப்பு ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

கனிமவள கொள்ளை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி PEOPLE OF COIMBATORE அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


கோவை: கனிமவள கொள்ளையை தடுக்க கோரி PEOPLE OF COIMBATORE அமைப்பு ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கூறி பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் என பலரும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



இந்நிலையில் கனிம வளக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் PEOPLE OF COIMBATORE அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது, சுய நலனுக்காக கனிம வளங்களை வெட்டி எடுப்பதை அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும். கல்குவாரியில் பயன்படுத்தும் வெடி மருந்துகளால் கற்பாறைகள் விவசாய நிலத்தில் விழுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் கனிம வளத்தை எடுக்கும் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும், இரவு நேரங்களில் செயல்படும் குவாரிகளின் உரிமைக்கு ரத்து செய்ய வேண்டும்.

கனிமவள கடத்தலுக்கு துணை போகும் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். போலி அனுமதி சீட்டு பயன்படுத்தும் உரிமையாளர்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்.

கனிமவள கொள்ளையில் ஈடுபடும் லாரிகளை தடுத்து நிறுத்தும் கிராமமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது. மனித விலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிர் பிரிந்தால் 50 லட்சம் பிறப்பீடு தர வேண்டும்.

இவ்வாறான பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டு உள்ளன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...