கோவை இருகூர் பேரூராட்சியில் உள்ள மதுபான கடைகளை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் மனு!

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் செயல்பட்டு வரும் ஆறு மதுபான கடைகளை அங்கிருந்து அகற்றக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இருகூர் பேரூராட்சியில் பகுதியில் உள்ள 6 மதுபான கடைகளை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் இருகூரில் உள்ள ஒண்டிப்புதூர் மேம்பாலம், ஏ.ஜி புதூர் சாலை, சின்னியம்பாளையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஆறு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாகவும் மது அருந்தி விட்டு அருகில் உள்ள வீடுகளின் முன் மது பிரியர்கள் படுத்து உறங்குவதுடன் தகாத வார்த்தைகளில் அவர்களை பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அங்கு இருக்கக்கூடிய மதுபான கடைகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...