கோவையில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்ப்பு - 81 மனுக்கள் மீது விசாரணை!

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில், 81 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 2 மனுக்கள் மீது FIR, 3 மனுக்கள் மீது CSR பதிவு செய்யப்பட்டன. 76 மனுக்கள் சுமூக தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 81 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

மேற்படி மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.



இந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 81 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.



அதில், 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டன.



3 மனுக்கள் மீது மனு ரசீது (CSR) பதிவு செய்யப்பட்டன. 76 மனுக்கள் சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது.



இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...