கோவையில் புதுமண தம்பதிக்கு சின்ன வெங்காயத்தை பரிசளித்த நண்பர்கள்!

கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதிக்கு, அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் புதுமண தம்பதிக்கு அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக வழங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.

பருவமழை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம், மற்றும் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் புதுமண தம்பதிக்கு அவர்களது நண்பர்கள் சின்ன வெங்காயத்தை திருமண பரிசாக அளித்துள்ளனர்.



கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் ஹாலில் கணேஷ் -ஹேமா தம்பதியினரின் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மணமகனின் நண்பர்கள் சின்ன வெங்காயத்தை அன்பளிப்பாக அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...