ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி கோவையில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதம்


தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென அவர் கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலிதாவின் மரணத்தில் மர்மம்  இருப்பதாகவும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இதனிடையே, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் சமாதியின் அருகே செய்தியாளர்களைச் சந்தித்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சசிகலா அணியினரால் தான் தாக்கப்பட்டதாகவும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அ தி மு க அணியானது சசிகலா தரப்பு மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது.



இதனைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுன் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் ஓபிஎஸ் அணியினர், இன்று கோவை சிவானந்தா காலனியில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.









இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், 

முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார், நடிகர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...