தாராபுரம் நகராட்சி கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

தாராபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில், தெரிவிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கான கோரிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தாராபுரம் நகராட்சி வளர்ச்சிக்கான கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி வளர்ச்சி பணிகள் தேர்வு செய்வதற்கான கவுன்சிலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.

நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில். துணை தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் எஸ்.எம்.பாரிஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது, தாராபுரம் நகராட்சி பகுதியில் சாக்கடை, சாலை வசதி மற்றும் குடிநீர் திருமணமண்டபங்கள் கட்டுவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க அரசிடமிருந்து ரூ. 25 கோடி தேவைப்படும் என்று நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை மனதில் கொண்டு கூடிய விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும் தாராபுரம் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி வளர்ச்சிக்கு உதவியாக இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறியதாவது,



நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு இதுவரை ரூ.12 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு வளர்ச்சி பணிகள் நகராட்சியில் செய்யப்பட்டுள்ளது.

20 ஆண்டுகால கோரிக்கையாக நகராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மக்கள் பணியை இரவு பகல் பாராமல் உழைக்கும் எங்களுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவுன்சிலருக்கு ரூ. 5000, துணைத் தலைவர் ரூ.10,000, தலைவருக்கு ரூ 15,000 மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் நகரா வளர்ச்சிக்காக ரூ 25 கோடி நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை கூடிய விரைவில் அமைச்சர் பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஹெடெக் அன்பழகன், முபாரக் அலி, சீனிவாசன், சக்திவேல், தேவி அபிராமி, உஷா பானு நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...