மணிப்பூர் கலவரம் - முதல்வரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் பெண்கள் இருவரை ஆண்கள் சிலர் நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காத அம்மாநில முதலமைச்சர் பதவி விலக கோரி கோவை மருதமலையில் உள்ள சட்டக்கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், முதல்வரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் இட ஒதுக்கீடு சம்பந்தமாக இருபிரிவு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அந்த கலவரத்தில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கலவரத்தில், பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இதற்கு முக்கிய காரணம் பாஜக அரசு தான் என கூறி அங்குள்ள பல்வேறு பாஜகவினரின் இல்லங்களும் சூறையாடப்பட்டது.

இந்நிலையில் இரண்டு மணிப்பூர் பெண்களை ஆண்கள் வலுகட்டாயமாக நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து சென்ற வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் பாலியல் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உச்சபட்ச தண்டனை வழங்கிட வேண்டும், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தவறிய முதலமைச்சர் பிரேன்சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி உடனடியாக மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அரசியல் தொடர்பான பிரச்சனைகளில் பெண்கள் வழியாக்கப்படுவதை தடுத்து நிறுத்திட பெண்கள் பாதுகாப்பிற்கு சட்டங்கள் இயற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்தும் அவர்களது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...