கோவையில் வாய்த்தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய இருவர் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை அப்பநாயக்கன்பாளையம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் பக்கத்து வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஸ்ரீனிவாசன் என்பவரை தாக்கிய கர்ணா மற்றும் கிஷோர் ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வல்லரசு மற்றும் லோகோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


கோவை: அப்பநாயக்கன்பாளையம் அருகே வாய்த்தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை அப்பநாயக்கன்பாளையத்தை அடுத்த கலைஞர் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் ஸ்ரீனிவாசன், ஓட்டுனராக உள்ள இவரது வீட்டருகே குடியிருந்து வருபவர் கர்ணா மற்றும் கிஷோர். இவர்கள் இருவருக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வீட்டருகே நின்று கொண்டிருந்த ஸ்ரீனிவாசனிடம் கர்ணா மற்றும் கிஷோர் அவர்களது நண்பர்களான வல்லரசு மற்றும் லோகேஷ் ஆகியோருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அது கைலப்பாக மாறி 4 பேரும் சேர்ந்து ஸ்ரீனிவாசனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஸ்ரீனிவாசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீனிவாசன் துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கர்ணா மற்றும் கிஷோர் ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வல்லரசு மற்றும் லோகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...