ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்!

தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றிய மதிமுக சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூரில் மதிமுக சார்பில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ரவி உடனடியாக ஆளுநர் பொறுப்பில் இருந்து திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மூலனூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில், 1 கோடி கையெழுத்து இயக்கம் மூலனூர் ஒன்றிய அவை தலைவர் மாரிசாமி தலைமையில் நடைபெற்றது.



கையெழுத்து நிகழ்ச்சியை, மூலனூர் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் பேரூர் கழக செயலாளர் மக்கள் தண்டபாணி முன்நின்று துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்சியில், மாவட்ட செயலாளர் தமிழரசு, மதிமுக மூலனூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் ரத்தினசாமி, பேரூர் கழக செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட மதிமுக கட்சி நிர்வாகிகள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...