ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்!

தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றிய மதிமுக சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூரில் மதிமுக சார்பில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ரவி உடனடியாக ஆளுநர் பொறுப்பில் இருந்து திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மூலனூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில், 1 கோடி கையெழுத்து இயக்கம் மூலனூர் ஒன்றிய அவை தலைவர் மாரிசாமி தலைமையில் நடைபெற்றது.



கையெழுத்து நிகழ்ச்சியை, மூலனூர் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் பேரூர் கழக செயலாளர் மக்கள் தண்டபாணி முன்நின்று துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்சியில், மாவட்ட செயலாளர் தமிழரசு, மதிமுக மூலனூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் ரத்தினசாமி, பேரூர் கழக செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட மதிமுக கட்சி நிர்வாகிகள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...