ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்!

தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றிய மதிமுக சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக மதிமுக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூரில் மதிமுக சார்பில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ரவி உடனடியாக ஆளுநர் பொறுப்பில் இருந்து திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மூலனூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில், 1 கோடி கையெழுத்து இயக்கம் மூலனூர் ஒன்றிய அவை தலைவர் மாரிசாமி தலைமையில் நடைபெற்றது.



கையெழுத்து நிகழ்ச்சியை, மூலனூர் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் பேரூர் கழக செயலாளர் மக்கள் தண்டபாணி முன்நின்று துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்சியில், மாவட்ட செயலாளர் தமிழரசு, மதிமுக மூலனூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் ரத்தினசாமி, பேரூர் கழக செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட மதிமுக கட்சி நிர்வாகிகள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...