மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் உப்பு சத்தியகிரக போராட்டம்!

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஓன்றிய அரசை கண்டித்து திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உப்பு சத்திய கிரக போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் உப்பு சத்திய கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஓன்றிய அரசை கண்டித்து உப்பு சத்திய கிரக போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் ஓன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



மேலும், மேடையின் முன்பு உப்பு பாக்கெட்டுகள் வைக்கபட்டிருந்தன. இந்த போராட்டத்திற்கு பிறகு மாநில செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

மணிப்பூர் கலவரம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு முழு பொறுப்பு ஒன்றிய அரசு தான். இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் மற்றும் தமிழக முதல்வர் அனைவருக்கும் மகளிர் உரிமைத்துறை கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்வில், முன்னாள் பாடநூல் வாரிய தலைவர் லியாக்த் அலிகான், மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், திருப்பூர் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், உடுமலை நகர அமைப்பாளர் சக்திவேல், வழக்கறிஞர் பெரியார்தாசன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...