சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு – திருப்பூர் மாவட்டத்தில் 766 வழக்குகளுக்கு தீர்வு

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு இன்று நடந்தது. இதில் 2387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 766 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.



திருப்பூர்: மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு ஏழு அமர்வுகளாக நடைபெற்றது.

மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்கு, குடும்ப நல வழக்கு, சமரசத்துக்குரிய குற்ற வழக்கு,காசோலை மோசடி, வங்கி வாராக்கடன் வழக்கு என பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.



தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியும், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின் பேரில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு மொத்தம் 7 அமர்வுகளாக நடந்தது.

திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் முன்னிலையில் நடந்தது. இதில் 2387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 766 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மொத்த மதிப்பு ரூ. 28 கோடியே 51 லட்சத்து 60 ஆயிரத்து 936 ஆகும். மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 248-க்கு ரூ. 20 கோடியே 89 லட்சத்து 51 ஆயிரத்து 521 மதிப்பிலும், 68 சிவில் வழக்குகளுக்கு ரூ. 6 கோடியே 79 லட்சத்து 39 ஆயிரத்து 141-ம் என, 7 குடும்ப நல வழக்குகளுக்கு ரூ. 10 லட்சத்து 30 ஆயிரம், சமரசத்துக்கு உரிய குற்ற வழக்குகள் 415-க்கு ரூ. 16 லட்சத்து 39 ஆயிரத்து 700, 13 காசோலை மோசடி வழக்குகளின் மதிப்பு ரூ. 50 லட்சத்து 95 ஆயிரம், 15 வங்கி வராக்கடனின் மொத்த மதிப்பு ரூ. 5 லட்சத்து 5 ஆயிரத்து 574 என பல்வேறு வழக்குகளுக்கு சமரசத்தீர்வு எட்டப்பட்டது.

நிகழ்வில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் கார்த்திகேயன், நீதித்துறை நடுவர் முருகேசன், வழக்கறிஞர்கள் பழனிசாமி மற்றும் ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...