அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு - கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


கோவை: அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி புரட்சித்தமிழர் எடப்பாடியார் வாழ்க என்று அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கழகம் துடியலூர் பகுதி சார்பாக கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



இதில் பகுதி செயலாளர் வணிதா மணி, அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரன் மோகன், ஐ.டி விங் மாவட்ட செயலாளர் மணிகண்டன், வார்டு செயலாளர் சாந்தி பூசன், பந்தல் வீடு பிரகாஷ், சுரேஷ் பாபு, வெள்ளகிணர் காளிச்சாமி, அண்ணா தொழில்சங்கம் பகுதி செயலாளர் வி.ஆர்.முருகேசன், கட்சி நிர்வாகிகள் மோகன்ராஜ், சி.டி.சி.செல்வம், சுசீலா, அண்ணா ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் பாபு என்கிற ரங்கசாமி, வேல்முருகன், திரு, கெளதம், சுதாகர் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு துடியலூர் பேருந்து நிறுத்தும் அருகே பட்டாசு வெடித்தனர்.



அப்போது அவர்கள் புரட்சித்தமிழர் எடப்பாடியார் வாழ்க என்று கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...