தடாகம் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய 2 காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்!

தடாகம் சாலை காளையனூர் பகுதியில் ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள், தனியார் வாழை தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்திய நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.



கோவை: தடாகம் அருகே காளையனூர் பகுதியில் ஊருக்குள் 2 காட்டு யானைகள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் தடாகம், கனுவாய், சோமையம்பாளையம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியையும் ஒட்டியும், மலையை ஒட்டியும் உள்ளது. இங்கு காட்டுயானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

இந்நிலையில் அவ்வனவிலங்குகள் தண்ணீர் தேடியும் உணவு தேடியும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அவ்வாறு ஊருக்குள் புகும் வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்தி விட்டு சென்று விடுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு தடாகம் சாலை காளையனூரில் 2 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து உலா வந்துள்ளன. பின்னர் அங்குள்ள தனியார் வாழை தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள், வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சென்ற வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதால் வனத்துறையினர் இரவு நேர ரோந்துபணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...