பணி நிரந்தரம் செய்க… - பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள bsnl அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தமிழக அரசு ஓரிரு நாட்களில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என பகுதி நேர சிறப்பாசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.



பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள bsnl அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இச்சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா தேவகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் 12,200 ரூபாய் நியமனத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகவும், வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் 10,000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.

தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருவதாக கூறினர். திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும், என தெரிவித்த நிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் தங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை எனக் கூறினர்.

எனவே தமிழக அரசு ஓரிரு நாட்களில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...