மழை வெள்ளத்தால் செங்கத்துறை தடுப்பணை சேதம் - சீரமைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மனு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு பெய்த கன மழையில் சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணையை சரி செய்து தர வலியுறுத்தி பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.


கோவை: தாசில்தார், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, பேரூராட்சி அலுவலகம், முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்தும் மழையால் சேதமடைந்த தடுப்பணையை இதுவரை சீரமைக்கவில்லை என பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு பெய்த கன மழையில் சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணையை சரி செய்து தர வலியுறுத்தி பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், தடுப்பணை சேதம் அடைந்ததனால் அப்பகுதியை சுற்றிலும் உள்ள சுமார் 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக தாசில்தார், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, பேரூராட்சி அலுவலகம், முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த தடுப்பணையை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அப்பணிகள் எந்த துறையை சார்ந்தது என்பது தெரியாத பட்சத்தில் விவசாயிகளே அணையை சீரமைத்துக் கொள்ள அனுமதி அளிக்குமாறும் மனுவில் பாஜகவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...