மழை வெள்ளத்தால் செங்கத்துறை தடுப்பணை சேதம் - சீரமைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மனு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு பெய்த கன மழையில் சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணையை சரி செய்து தர வலியுறுத்தி பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.


கோவை: தாசில்தார், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, பேரூராட்சி அலுவலகம், முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்தும் மழையால் சேதமடைந்த தடுப்பணையை இதுவரை சீரமைக்கவில்லை என பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு பெய்த கன மழையில் சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணையை சரி செய்து தர வலியுறுத்தி பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், தடுப்பணை சேதம் அடைந்ததனால் அப்பகுதியை சுற்றிலும் உள்ள சுமார் 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக தாசில்தார், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, பேரூராட்சி அலுவலகம், முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த தடுப்பணையை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அப்பணிகள் எந்த துறையை சார்ந்தது என்பது தெரியாத பட்சத்தில் விவசாயிகளே அணையை சீரமைத்துக் கொள்ள அனுமதி அளிக்குமாறும் மனுவில் பாஜகவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...