இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் - 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டிபிரிவிலுள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பில் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



கோவை: தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாமில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். குறைபாடு இருந்த ஒருசில மாணவர்களை பெற்றோர்களுடன் மருத்துவமனைக்கு நேரில் வருமாறு மருத்துவர்கள் கூறினர்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டிபிரிவிலுள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பல் பரிசோதனை முகாம் தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

இந்த முகாமை தமிழம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் இரா. பழனிச்சாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் இரா.ப.அரவிந்தன் முன்னிலை வகித்தார்.



இந்த பரிசோதனைகளை தொப்பம்பட்டி பிரிவை சேர்ந்த வாசன் ஐ கேர் சார்பில் மார்கெட்டிங் மேனேஜர் பத்மநாதன் தலைமையில் மருத்துவர்கள் பாலா, முகமது மற்றும் ரூபிகா ஆகியோரும், காரமடை வினிஸ் பல் மருத்துவமனையில் இருந்து டாக்டர்.மெல்சிஜிடெக் மற்றும் டாக்டர்.வசுந்தரா ஆகியோரும் கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கண் மற்றும் பல் சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொண்டு குறைபாடுகளை மாணவர்களிடம் கண்டறிந்தும், அதற்கான விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கினர்.

ஒரு சில மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலை இருப்பதால் அவர்களை அவர்களது பெற்றோருடன் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இந்த முகாமில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பெ.பாஸ்கர் தலைமையில் துணை முதல்வர் ஷிபா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...