இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் - 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டிபிரிவிலுள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பில் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



கோவை: தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாமில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். குறைபாடு இருந்த ஒருசில மாணவர்களை பெற்றோர்களுடன் மருத்துவமனைக்கு நேரில் வருமாறு மருத்துவர்கள் கூறினர்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டிபிரிவிலுள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பல் பரிசோதனை முகாம் தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

இந்த முகாமை தமிழம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் இரா. பழனிச்சாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் இரா.ப.அரவிந்தன் முன்னிலை வகித்தார்.



இந்த பரிசோதனைகளை தொப்பம்பட்டி பிரிவை சேர்ந்த வாசன் ஐ கேர் சார்பில் மார்கெட்டிங் மேனேஜர் பத்மநாதன் தலைமையில் மருத்துவர்கள் பாலா, முகமது மற்றும் ரூபிகா ஆகியோரும், காரமடை வினிஸ் பல் மருத்துவமனையில் இருந்து டாக்டர்.மெல்சிஜிடெக் மற்றும் டாக்டர்.வசுந்தரா ஆகியோரும் கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கண் மற்றும் பல் சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொண்டு குறைபாடுகளை மாணவர்களிடம் கண்டறிந்தும், அதற்கான விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கினர்.

ஒரு சில மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலை இருப்பதால் அவர்களை அவர்களது பெற்றோருடன் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இந்த முகாமில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பெ.பாஸ்கர் தலைமையில் துணை முதல்வர் ஷிபா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...