பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை எடுக்க வேண்டும்..! போராட்டம் நடத்தி அதிமுக எதிர்ப்பு.!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 1850 எண் கொண்ட டாஸ்மாக் கடையால், பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: பல முறை புகார் அளித்தும் டாஸ்மாக் கடையை எடுக்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவு வேறமாதிரி இருக்கும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொச்சின் நெடுஞ்சாலையில் 1850 எண் கொண்ட டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்த கடையில் பார் வசதி கிடையாது. மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்திவரும் இந்த சாலையில் டாஸ்மாக் கடைக்கு அருகே நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்படி டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு சாலையிலேயே அமர்ந்து நிதானமாக மது அருந்திவிட்டு சாலை ஓரமாகவே அலங்கோலமாக துணி விலகியது கூட தெரியாமல் சாலையில் விழுந்து கிடக்கின்றனர். மேலும் பெண்கள் குழந்தைகள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள இப்பகுதியில் டாஸ்மாக் கடையால் விபத்துக்கள் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக வை சேர்ந்த எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.



இந்நிலையில் நடவடிக்கை எடுக்காததால் இன்று அதிமுக சார்பில் பல்லடம் நகர தலைவர் ராமமூர்த்தி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார் டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...