கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்! கோவையில் திமுகவினர் போஸ்டர்

கோவை மாநகரில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திமுகவினர் போஸ்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் தினமலர்(திருச்சிப்பதிப்பு) நாளிதழில் காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செய்தி தலைப்புடன் செய்தி வெளியாகியிருந்தது.

அதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமும், தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டங்களும் நடைபெற்றன.

அரசு பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...