தமிழகத்திற்கு பேரிடி காத்திருக்கிறது - கோவையில் ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

தமிழகத்திற்கு பேரிடி காத்திருக்கிறது. வெடிகுண்டு பிரச்சினையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது தேசத்திற்கு பாதுகாப்பற்ற செயல். குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்தால் மீண்டும் தமிழகத்தில் குண்டு வைப்பார்கள் என ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: எல்லோருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். சமூகத்திற்கு தொண்டாற்றுகிறார்களோ நலன் தருகிறார்களோ அவர்களுக்கு உரிய நேரத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உலக நன்மை வேண்டி அருள்மிகு நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ஜோதி ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்:-



எல்லோருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். சமூகத்திற்கு தொண்டாற்றுகிறார்களோ நலன் தருகிறார்களோ அவர்களுக்கு உரிய நேரத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தீயோர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிறைச்சாலை தீயோர்கள் இருக்கும் இடமாக இருக்க வேண்டும்.கோவை குண்டுவெடிப்பில் 10 நிமிடத்தில் 63 உயிர்கள் நாம் இழந்திருக்கிறோம். சமுதாயத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். காரில் வெடிகுண்டு வெடித்து இருந்தால் கோவையில் 5 கிலோ மீட்டர் சுற்று அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.

தமிழகத்திற்கு பேரிடி காத்திருக்கிறது. வெடிகுண்டு பிரச்சினையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது தேசத்திற்கு பாதுகாப்பற்ற செயல்.

குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்தால் மீண்டும் தமிழகத்தில் குண்டு வைப்பார்கள் என ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...