தொண்டாமுத்தூரில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் - அச்சத்தில் மக்கள்!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் இரண்டு வீடுகளை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அங்கிருந்த உணவுப் பொருட்களையும் தின்றுள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: தொண்டாமுத்தூர் அருகே ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பேபாளையம் கிராமம் உள்ளது. மலை அடிவாரப்பகுதியில் இந்த கிராமம் உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை யானை ஒன்று தனது குட்டியுடன் வனப்பகுதியில் இருந்து வெளியே குப்பேபாளையத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு வந்தது. அதிகாலை 3 மணியளவில் வந்த யானையை கண்டு நாய்கள் அதிக அளவில் சத்தம் போட்டது.

இதனால் சுதாரித்துக் கொண்டு மக்கள், யானை வீட்டின் ஓடுகளை உடைப்பது கண்டு வெளியே ஓடினர். இதில்,வெள்ளிங்கிரி (43) மற்றும் நஞ்சன் (60) ஆகிய இருவரது வீடுகளை யானை சேதப்படுத்தியது.

மேலும் வீட்டின் உள்ளே இருந்த கோதுமை, அரிசி போன்றவற்றை தின்றது. சுமார் 1 மணி நேரம் அங்கே குட்டியுடன் யானை நின்றது.

தொடர்ந்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை காட்டு பகுதிக்குள் விரட்டினர்.

சுமார் 10 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் கடந்த 2 வருடங்களாக மின் விளக்குகள் எரிவதில்லை. இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தால் வெளியில் வர முடியாமல் குழந்தைகளுடன் அவதிப்படுவதாக பழங்குடியினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.

மேலும் அதிகாரிகள் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு சென்ற தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பழங்குடி மக்களுக்கு ஆறுதல் கூறி சேதம் அடைந்த வீட்டிற்கு பழுது பார்க்க நிதி உதவி கொடுத்து உடனடியாக மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...