தில்லி ஜெ.என்.யு. மாணவர் தற்கொலை குறித்து மத்திய அரசு நடவடிக்கை கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்களன்று (மார்ச் 13) திடீரென முத்துகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் தில்லி ஜெ.என்.யு-வில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இதனிடையே, கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள வாடிக்கையாளர் சேவை மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதைத் தொடர்ந்து அலுவலக வாயில் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாயில் முன்பு அமர்ந்த மாணவர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஜாதிய கட்டமைப்பு காரணமாகவே இவ்வாறு தற்கொலைகள் தொடர்ந்து வருவதாக தெரிவித்த மாணவர்கள், இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என தெரிவித்தனர்.



இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...