தாராபுரத்தில் மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து - நள்ளிரவு வரை மின்சாரம் நிறுத்தம்!

தாராபுரம் புறவழிச்சாலையில் நேற்றிரவு அதிக வேகத்துடன் வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து உடுமலை சாலை சிக்னல் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் நள்ளிரவு 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே சாலையோர மின் கம்பத்தில் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலையில் நேற்று இரவு அதிக வேகத்துடன் வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து உடுமலை சாலை சிக்னல் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மின் கம்பத்தில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் மின்சார ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. மேலும் கம்பம் உடைந்து விழும் நிலை ஏற்பட்டது.



பெரும் மின்விபத்தை தவிர்க்க மின்சார வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக நேற்று நள்ளிரவு 2 மணி வரை தாராபுரம் நகரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், சிறு குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...