நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா -  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள வர சக்தி விநாயகர் கோவிலில் கடந்த பத்தாம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக தொடங்கியது. இன்றைய தினம் சூரிய கும்ப பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், சுவாமிகளுக்கு கண் திறத்தல், பெயர் சூட்டுதல் நடைபெற்றது.



கோவை: நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அருள்மிகு வரசிக்தி விநாயகர் கோயிலில் முதலாம் ஆண்டு விழா வள்ளி தெய்வானை கல்யாணம், சுப்பிரமணிய சுவாமி பஞ்சலோக விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண வைபோக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 10ம் தேதி மாலை மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் விக்னேஸ்வர பூஜை, பஞ்சகாவிய பூஜை, வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனம், யாகசலா பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், மஹா பூர்ணாஹிதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் தொடங்கிய பூஜையில் சூரிய கும்ப பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், சுவாமிகளுக்கு கண் திறத்தல், பெயர் சூட்டுதல் நடைபெற்றது.



தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் இருந்த மூலவர் வரசித்தி விநாயகருக்கு 108 பால் குடத்துடன் வாதியத்துடன் ஊர்வலமாக வந்து அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான மூலவர் வரசித்தி விநாயகர்க்கும் மற்றும் புதியதாக செய்யப்பட்டுள்ள உற்சவ திருமேனிகளுக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேகத்தின் போது நரசிம்ம நாயக்கன் பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகர் தரிசனம் பெற்றனர். 



தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானமும் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...