ரூ. 2 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கியது உடுமலை தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை!

10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேவாங்கர் சமூக நல மன்றம் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கி கெளரவிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேவாங்கர் சமூக நல மன்றம் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோயில் அரங்கில் நடைபெற்றது.



இதில் பத்தாம் வகுப்பில் 11 பேருக்கும், 12-ம் வகுப்பில் 6 பேருக்கும் கல்வி பரிசளிப்பாக சான்றிதழ் மற்றும் கோப்பைகளும் , கல்வி உதவித்தொகையாக 15 பேருக்கு சுமார் 2 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.



மேலும் 75 வயதைக் கடந்த 32 முதியோர்களுக்கு கௌரவம் செய்து நினைவு பரிசு வழங்கினர்.



பின்னர் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் முத்தோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவாங்கர் சமூக சங்கம் மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் மாணிக்கம், மெடிக்கல் திருமலை சாமி, சீனிவாசன் சௌந்தர்ராஜன் ஞானமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...