ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் அமைப்புகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழக முதல்வரிடம் தங்களின் 7 அம்ச கோரிக்கையை ஆவணம் செய்ய கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் (குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) மனு அளித்தனர்.


கோவை: தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களுக்கு பீக் அவர் கட்டணத்தை நீக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் ஆவணம் செய்யுமாறு ஆட்சியரிடம் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் மனு அளித்தனர்.



"குடிசை மற்றும் குறு மின் நுகர்வோர்களுக்கு Tariff 3A(1) மின் இணைப்பு அளிக்க வேண்டும், தாழ்வழுத்த மின் கட்டணங்களுக்கு 0-12KW- 20ரூ, 0-50KW- 35ரூ, 50-112 KW- 35ரூ, 112-150KW- 350ரூ என்பது தொழில்துறையினரால் எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் மின்னழுத்த பயன்பாட்டாளர்களுக்கான அதிகபட்ச கேட்பு கட்டணம் தற்பொழுது 562 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் முந்தைய கட்டணமான 350 ரூபாய்க்கே குறைக்கப்பட வேண்டும்.

தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களுக்கு பீக் அவர் கட்டணத்தை நீக்க வேண்டும். அதே சமயம் உயர் மின்னழுத்த பயனீட்டாளர்களுக்கு பீக் அவர் நேரம் நான்கு மணி நேரமாகவும், பீக் அவர் கட்டணம் 20% ஆகவும் குறைக்கப்பட வேண்டும்.

வருடாந்திர மின் கட்டண அதிகரிப்பு 1% இருக்க வேண்டும், சோலார் நெட்வொர்க்கிங் கட்டணம் நீக்கப்பட வேண்டும் மற்றும் நெட் மீட்டர் முறையில் அதிகப்படியாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மின்சாரத்தை உபயோகிக்கும் மின்சாரத்திலிருந்து கழிக்கப்பட வேண்டும், 112-150KW உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆகிய 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இதனை முதல்வரின் கவனத்திற்கு ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே முதல்வர் தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.



இந்த ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அந்தந்த மாவட்ட தொழில் அமைப்புகள் முதல்வரின் கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதும் கோவையில் கதவடைப்பு போராடம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...