ஆம்னி வேனில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - தாராபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வேனில் குட்கா கடத்தி நபரை கைது செய்து 48 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் ஆம்னி வேனில் கடத்தி வந்த குட்கா பொருள்களை போலிசார் பறிமுதல் செய்தனர்.

கரூர் தாராபுரம் சாலையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான 5-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது ஆம்னி வேன் ஒன்று தாராபுரம் நோக்கி மிக வேகமாக வந்தது.

அதனை கண்ட போலீசார் தடுத்து நிறுத்தி வேனை சோதனை செய்தனர். அப்போது அதில் பண்டல், பண்டலாக கட்டுகள் இருந்து தெரியவந்தது.

வாகன ஓட்டுனரிடம் கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறிய டிரைவர் மீது சந்தேகம் ஏற்பட்டு வாகனத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.



அப்போது தாராபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விற்பனைக்காக குட்கா பொருடகளை கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டார்.



விசாரணையில் தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதியைச் சேர்ந்த அண்ணாசாமி மகன் செல்லப்பாண்டி (24) என தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிந்து 48-கிலோ குட்கா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த பின்னர் செல்லப்பாண்டியை போலீசார் உடுமலைப்பேட்டை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...