உடுமலை ஓன்றியத்தில் கிராம சபைக்கூட்டம் - ஏராளமான மக்கள் பங்கேற்பு

உடுமலை ஒன்றியங்களுக்கு உடபட்ட பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஓழிப்பது, துய்மை பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: காந்தி ஜெயந்தியையொட்டி உடுமலை ஓன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.



பெரிய கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல் தொடர்பாகவும், வடகிழக்கு பருவ மழை முன்னேற்றத்திற்கு நடவடிக்கை குறித்தும் பொது சுகாதாரம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.



எனது குப்பை எனது பொறுப்பு என் கிராமத்தை தூய்மையாகவும் சுத்தமாக வைத்திருப்பது எனது கடமை என அனைவரும் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



இதே போல போடிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார் அப்போது ஊராட்சிகள் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நடைபெற உள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



பின்னர் தூய்மை உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர்.



இதேபோல சின்னவீரன்பட்டி ஊராட்சியில் மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...