தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை உறுதி மொழி

மகாத்மா காந்தி பிறந்த நாளில் மக்கள் ஒற்றுமை காத்திட வேண்டும் என்று தாராபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒற்றுமை உறுதி மொழி ஏற்கப்பட்டது.


திருப்பூர்:நாம் சாதிய சிந்தனையை தூக்கி எறிவேம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மகாத்மா காந்தி பிறந்த நாளில் மக்கள் ஒற்றுமை காத்திட, மத நல்லிணக்கம் பேணிட, சாதி, சமயம், பேதமற்ற சம உலக சமத்துவம் படைத்திட அரசு ஊழியர்கள் மக்கள் ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம் என்று மக்கள் ஒற்றுமை உறுதி மொழி ஏற்கும் கூட்டம், தாராபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி தலைமையில் நடைபெற்றது.



அப்போது அரசு ஊழியர்கள் நாம் சாதிய சிந்தனையை தூக்கி எறிவேம், மத ரீதியிலான பாகுபாட்டை உடைத்து எறிவேம் என்பன உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து காந்தி பிறந்த நாளில் 100-க்கும் மேற்பட்டோர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்ட கிளை தலைவர் செந்தில் குமார், மாவட்ட பொருளாளர் முருக சாமி உள்ளிட்ட மாவட்ட, வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...