குண்டடம் அருகே கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவரிடம் கிராம மக்கள் மனு

குண்டடம் அருகே வெருவேடம்பாளையத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முக்கிய துறைகளின் அலுவலர்கள் யாரும் பங்கேற்காததால் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு தேதியில் அனைத்து துறை அலுவலரகளையும் அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டும் என மக்கள் மனு அளித்தனர்.


திருப்பூர்: கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய 19 துறைகளில், 15 துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மற்ற துறையினரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குண்டடம் அருகே நந்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெருவேடம்பாளையத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் தனசெல்வி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

கிராமசபை கூட்டத்தில் கால்நடை பராரிப்பு, உள்ளாட்சி, சுகாதாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மட்டும் பங்கேற்று அவர்களின் துறை சார்ந்து பேசினர். கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய 19 துறைகளில் ஏனைய 15 துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மற்ற துறையினரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக பொதுமக்கள் பெரும்பாலான அலுவலர்கள் கலந்து கொள்ளாததால் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-கிராமசபை கூட்டத்தில் முக்கிய துறைகளின் அலுவலர்கள் யாரும் பங்கேற்காததால் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு தேதியில் அனைத்து துறை அலுவலரகளையும் அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டுகிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.

அந்த மனுவை பஞ்சாயத்து தலைவர் பெற்றுக் கொண்ட நிலையில் அதற்கு பதிலளித்த அதிகாரி இந்த கருத்தை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அடுத்த முறை அனைத்து துறை அலுவலர்களையும் பங்கேற்க ஏற்பாடு செய்கிறோம் என்றார்.

அதனைக் கேட்ட பொதுமக்கள் கடந்த 3 கிராமசபை கூட்டங்களிலும் இந்த விசயத்தை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கூட்டம் முடிந்ததும் அதை மறந்துவிடுகின்றனர். அதனால் இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதுபற்றி கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். கூட்டத்தை ரத்து செய்ய முடியாது என மீண்டும் அதிகாரி கூறினார்.இதனால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...