ஆனைமலையில் மர்மமாக இறந்த ஆண் சிறுத்தை - வனத்துறையினர் தீவிர விசாரணை

பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இறந்து கிடந்த 7 வயது சிறுத்தையின் உடல் வனத்துறையின் உத்தரவுப்படி காட்டுப் பகுதியிலேயே எரியூட்டப்பட்டது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மர்மமாக இறந்த ஆண் சிறுத்தை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, போத்தமடை சுற்றுக்கு உட்பட்ட ஐயப்பன் கோவில் பகுதியில், சிறுத்தை ஒன்று, இறந்து கிடப்பதை பார்த்தனர். இதையடுத்து, கள இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில், வனச்சரகர் புகழேந்தி, இயற்கை வரலாறு அறக்கட்டளையை சேர்ந்த திருமலைசாமி, தன்னார்வ அமைப்பை சேர்ந்த ரவிக்குமார் அடங்கிய குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, கால்நடை டாக்டர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவ குழுவினர், இறந்த சிறுத்தைக்கு உடற்கூறு ஆய்வு செய்தனர்.

அதில், இறந்தது 7 வயதுள்ள ஆண் சிறுத்தை என்பதும் கண்டறியப்பட்டது. சிறுத்தையின் உடலில், அனைத்து பற்களும், நகங்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிற விலங்குடன் சண்டையிட்டதால், சிறுத்தை இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர். அங்கேயே, சிறுத்தையின் உடல் தீயிட்டு எரியூட்டப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...