பல்லடத்தில் நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாடச் சென்ற 3 இளைஞர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரத்தில் இரவு நேரத்தில் விலங்களை வேட்டையாட சென்ற மூன்று இளைஞர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


திருப்பூர்: ஆவணங்கள் இல்லாம் நாட்டு துப்பாக்கியை வைத்து விலங்குகளை வேட்டையாட சென்ற மூன்று இளைஞர்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் துப்பாக்கியுடன் வலம் வருவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாணிக்காபுரம் சாலையில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது 3 இளைஞர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் காட்டு பகுதியில் வலம் வந்து கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் அவர்கள் அறிவொளி நகர் குறவர் காலனி பகுதியை சேர்ந்த பூவரசன், ஹரிகிருஷ்ணன் மற்றும் சக்திவேல் என்பதும், காட்டுப்பகுதியில் முயல், காடை, கொக்கு போன்ற பறவை மற்றும் விலங்குகளை வேட்டையாட ஆவணம் எதுவுமின்றி நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.



இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...