மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 20 வணிகர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 465 நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.


திருப்பூர்: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 20 வணிகர்கள் பங்கேற்றதாக முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு சு‌ரேஷ் பாபு தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5.10.2023 வியாழக்கிழமை அன்று பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 465 நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 7392ற்கும், குறைந்த பட்சவிலை ரூபாய் 6450ற்கும், சராசரி விலை ரூ 6800ற்கும் விற்பனையானது.

பருத்தியின் மொத்த அளவு 5152 மூட்டைகள். குவிண்டால் 1628.10மதிப்பு ரூபாய் 1,09,31,545/- ஏலத்தில் 20 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு சு‌ரேஷ் பாபு தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...