மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நிலை கட்டணம் மற்றும் பரபரப்பு நேரக் கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்


திருப்பூர்: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 16 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மின் நுகர்வோர் தொழில் கூட்டமைப்பினர் அறிவிப்பு.

தமிழக அரசின் மின்சார வாரியம் சார்பாக சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள நிலைக் கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் சிறு குறு நிறுவனங்களை இணைத்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு என உருவாக்கப்பட்டு அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



இருப்பினும் எந்தவித கோரிக்கையும் நிறைவேற்றப்படாததன் காரணமாக ஏற்கனவே உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம், தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மற்றும் தபால் அனுப்பும் போராட்டம் உள்ளிட்டவை நடைபெற்ற நிலையில் இன்று திருப்பூரில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பல்லடம் சாலையில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நிலை கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணம் உள்ளிட்டவை காரணமாக தொழில்துறை நலிவடைந்து வருவதால் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ந்து தமிழக அரசு தொழில் துறையினரின் ஐந்தம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் திரண்டு வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வருகின்ற 16ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்திலும் திருப்பூரிலிருந்து திரளாக கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...