மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நிலை கட்டணம் மற்றும் பரபரப்பு நேரக் கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்


திருப்பூர்: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 16 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மின் நுகர்வோர் தொழில் கூட்டமைப்பினர் அறிவிப்பு.

தமிழக அரசின் மின்சார வாரியம் சார்பாக சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள நிலைக் கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் சிறு குறு நிறுவனங்களை இணைத்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு என உருவாக்கப்பட்டு அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



இருப்பினும் எந்தவித கோரிக்கையும் நிறைவேற்றப்படாததன் காரணமாக ஏற்கனவே உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம், தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மற்றும் தபால் அனுப்பும் போராட்டம் உள்ளிட்டவை நடைபெற்ற நிலையில் இன்று திருப்பூரில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பல்லடம் சாலையில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நிலை கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணம் உள்ளிட்டவை காரணமாக தொழில்துறை நலிவடைந்து வருவதால் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ந்து தமிழக அரசு தொழில் துறையினரின் ஐந்தம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் திரண்டு வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வருகின்ற 16ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்திலும் திருப்பூரிலிருந்து திரளாக கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...