வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு - தாராபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை ஆலோசனைக் கூட்டம்

தாராபுரத்தில் வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழ்நாட்டு ஆளுநர் அவருக்கு உண்டான வேலையை செய்வதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார் என்று ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் புகார் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



ஸ்ரீ ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீரமங்கை குயிலில் நினைவேந்த நிகழ்ச்சி குறித்து செயலாளர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர் சந்திப்பில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் கூறுகையில், தமிழ்நாட்டு ஆளுநர் அவருக்கு உண்டான வேலையை செய்வதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார்.

விடுதலைப் போராட்ட வீரர் பொன்மானுக்கு மணிமண்டபம் கட்ட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியும் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. மணிமண்டபம் கட்ட இடத்தை தேர்வு செய்து உடனடியாக மணிமண்டபம் கட்டும் பணியை துவக்க வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை குறித்த கேள்விக்கு அண்ணாமலை பாதையாத்திரை என்ற பெயரில் கேவலப்படுத்தி வருகிறார். பெயரை ஏற்ப தமிழ்நாட்டில் அண்ணாமலை என்ன பேசுகிறார் என்று கேட்கக்கூட ஆள் இல்லை. ஏனென்றால் அண்ணாமலையின் பேச்சு கேலிக்கூத்தாக மாறிவிட்டது அண்ணாமலையின் பாதையாத்திரை வன்மையாக கண்டிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...