நாடகங்கள் நடத்த இலவச அரங்குகள் தேவை - நாடக கலைஞர்கள் கோரிக்கை

நாடகங்கள் நடத்துவதற்கு அரசுக்கு சொந்தமான அரங்கங்களை இலவசமாக வழங்க அரசு முன்வர வேண்டும் என கோவையில் நாடக கலைஞர் காத்தாடி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.


கோவை: நாடகம் பார்ப்பதில் குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துவருவதாக நாடக கலைஞர்கள் வேதனை

பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில் நடந்த அக்., மாத நிகழ்ச்சியில், காத்தாடி ராமமூர்த்தி குழுவினரின், ஜூகல்பந்தி நகைச்சுவை நாடகம் நடந்தது.அதில், பங்கேற்ற நடிகர், நாடக கலைஞருமான காத்தாடி ராமமூர்த்தி, நிருபர்களிடம் கூறும் போது, தற்போது சபாக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சென்னையில், 160 - 170 சபாக்கள் வரை இருந்தன. தற்போது, 12 சபாக்களாக குறைந்துள்ளன; இரண்டு சபாக்கள் சேர்ந்து நாடகம் நடத்தும் சூழல் உள்ளது.நாடகத்தின் வளர்ச்சி குறையவில்லை. பார்க்க வரும் ரசிகர்கள், 40 - 50 வயதானவர்களாக உள்ளனர்; இளைஞர்கள், குழந்தைகள் வருவதில்லை. 'டிவி', மொபைல்போன் உள்ளிட்ட நவீன வளர்ச்சியாக கூட இருக்கலாம். குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரையும் வர வைக்க, சிறந்த நாடகம் தயார் செய்து விளம்பரப்படுத்த வேண்டும்.

ஒருமுறை அவர்கள் நாடகம் பார்த்தால், பிடித்து தொடர்ந்து பார்க்க துவங்குவர்.நாடகம் தான் அனைத்து கலைகளுக்கும் முன்னோட்டமான தாய். இதில் இருந்து தான் பல கலைகள் உருவாகின.தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பில், அரசு உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், அரசுக்கு சொந்தமான அரங்கங்களை, குறைந்த வாடகைக்கு அல்லது இலவசமாக நாடகம் நடத்த வழங்கலாம். இதன், வாயிலாக நாடக கலை வளரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...