நாடகங்கள் நடத்த இலவச அரங்குகள் தேவை - நாடக கலைஞர்கள் கோரிக்கை

நாடகங்கள் நடத்துவதற்கு அரசுக்கு சொந்தமான அரங்கங்களை இலவசமாக வழங்க அரசு முன்வர வேண்டும் என கோவையில் நாடக கலைஞர் காத்தாடி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.


கோவை: நாடகம் பார்ப்பதில் குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துவருவதாக நாடக கலைஞர்கள் வேதனை

பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில் நடந்த அக்., மாத நிகழ்ச்சியில், காத்தாடி ராமமூர்த்தி குழுவினரின், ஜூகல்பந்தி நகைச்சுவை நாடகம் நடந்தது.அதில், பங்கேற்ற நடிகர், நாடக கலைஞருமான காத்தாடி ராமமூர்த்தி, நிருபர்களிடம் கூறும் போது, தற்போது சபாக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சென்னையில், 160 - 170 சபாக்கள் வரை இருந்தன. தற்போது, 12 சபாக்களாக குறைந்துள்ளன; இரண்டு சபாக்கள் சேர்ந்து நாடகம் நடத்தும் சூழல் உள்ளது.நாடகத்தின் வளர்ச்சி குறையவில்லை. பார்க்க வரும் ரசிகர்கள், 40 - 50 வயதானவர்களாக உள்ளனர்; இளைஞர்கள், குழந்தைகள் வருவதில்லை. 'டிவி', மொபைல்போன் உள்ளிட்ட நவீன வளர்ச்சியாக கூட இருக்கலாம். குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரையும் வர வைக்க, சிறந்த நாடகம் தயார் செய்து விளம்பரப்படுத்த வேண்டும்.

ஒருமுறை அவர்கள் நாடகம் பார்த்தால், பிடித்து தொடர்ந்து பார்க்க துவங்குவர்.நாடகம் தான் அனைத்து கலைகளுக்கும் முன்னோட்டமான தாய். இதில் இருந்து தான் பல கலைகள் உருவாகின.தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பில், அரசு உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், அரசுக்கு சொந்தமான அரங்கங்களை, குறைந்த வாடகைக்கு அல்லது இலவசமாக நாடகம் நடத்த வழங்கலாம். இதன், வாயிலாக நாடக கலை வளரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...