ஆப்ரேஷன் அஜய் திட்டத்தில் இஸ்ரேலில் இருந்து கோவை திரும்பியவர்கள் மத்திய அரசுக்கு நன்றி

இஸ்ரேலில் யாராவது சிக்கியிருந்தால் அரசு அறிவித்த உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: ஆப்ரேஷன் அஜய் மூலம் இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய கோவையைச் சேர்ந்தவர்களை அம்மாவட்ட ஆட்சியர் விமானநிலையம் சென்று வரவேற்றார்.

இஸ்ரேல் போர் சூழலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஆப்ரேஷன் அஜய் எனும் திட்டத்தின் மூலம் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதற்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 221 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாய்நாடு திரும்பியுள்ளனர்.



அவர்களில் ஏழு பேர் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.



அவர்களை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விமான நிலையத்தில் வரவேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர்,



'இஸ்ரேலில் இருந்த கோவை, நாமக்கல், கரூர், நீலகிரி பகுதிகளை சேர்ந்த 7 பேர் கோவைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து கோவைக்கு 2 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் விமானம் மூலம் கோவை வந்துள்ளனர். இவர்களில் சிலர் மாணவர்கள் ஆகும்.

அதில் 2 பேர் கோவையை சேர்ந்தவர்கள். கோவையை சேர்ந்தவர்களை அழைத்து செல்ல அவர்களது பெற்றோர்கள் வந்துள்ளனர். மற்ற பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு

வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் பிரச்சனை முடிந்த பின்னர் இவர்கள் அங்கு செல்லலாம்.

இஸ்ரேலில் யாராவது இருந்தால் அரசு அறிவித்த உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார். மத்திய அரசின் ஆப்ரேஷன் அஜய் திட்டம் மிக விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தப்பட்டு, போர் சூழலில் இருந்த தங்களை மத்திய அரசும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் சிறப்பாக செயல்பட்டு மீட்டுள்ளதாகவும்.

இதற்காக மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பியவர்களும், அவர்களது உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...