கோவையில் தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, பேதி

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகில் கிருஷ்ணம்மாள் தனியார் மகளிர் கல்லூரியின் விடுதியில் சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.


கோவை: மாணவிகளின் உடல்நிலை பிரச்சனைக்கு விடுதியில் வினியோகிக்கப்பட்ட சுகாதரமற்ற தண்ணீர் தான் காரணமாக என சுகாதார மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகில் கிருஷ்ணம்மாள் தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கான விடுதி ஹோப்ஸ் சிக்னல் அருகே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதியில் மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே, சுமார் 30 மாணவிகள் விடுதியின் சார்பிலேயே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடனே விடுதி திரும்பினர்.

லேசான பாதிப்பு என்பதால் மாணவிகள் சிகிச்சை பெற்று அனைவரும் நலமுடன் விடுதி திரும்பி விட்டதாகவும், தண்ணீரில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக இருக்கலாம் என்பதால் மாநகராட்சியிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், கல்லூரியில் முறையாக சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை உறுதி செய்கிறோம் என கல்லூரி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், சம்மந்தப்பட்ட கல்லூரியில் சுகாதாரத்துறை மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் முடிவிலேயே குடிநீரில் ஏற்பட்ட மாசு தொடர்பான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வரும் 20ம் தேதி வரை ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற உள்ளதாகவும், கல்லூரியில் நேரடி வகுப்புகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை எல்லாம் முடிந்து மாடல் தேர்வுகள் நடைபெற உள்ளதாக கூறபடுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...